2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துன்புறுத்தலுக்கு உள்ளான பணிப்பெண்கள் 15பேர் நாடு திரும்பினர்

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் 15பேர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

தாம் சேவைபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்த இந்த பெண்கள், குவைத் தூதரகத்தில் தஞ்சமடைந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள், தமது வீடுகளுக்குச் செல்ல தேவையான வசதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துகொடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .