2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பாதெனியவிடம் விசாரிக்க திகதி குறிப்பு

Thipaan   / 2017 மே 23 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனியவிடம் விசாரணை செய்வதற்கான தினமாக, ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (22) குறித்தது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டார் என, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, புறவெசி பலய அமைப்பின் பிரதித் தலைவர் காமினி வெயங்கொட ஆகியோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு, கடந்த 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அநுருத்த பாதெனியவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X