2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாமல் குமாரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென, தகவல் தெரிவிக்கின்றது.

“ஜனாதிபதியையும் கோட்டாபயவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது” என, நாமல் குமார, கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவே, மேற்கண்டவாறு தன்னிடம் தெரிவித்திருந்தாரென, அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாமல் குமார தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் ​தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நாமல் குமாரவிடம், இரண்டு நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X