2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நோர்வூட் நகரில் 4 கடைகள் தீக்கிரை

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் , ரஞ்சித் ராஜபக்‌ஷ

நோர்வூட் பிரதான நகரில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்பதுடன், பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச மக்களும் நோர்வூட் பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X