2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவில் 8 அங்கத்தவர் ஜனாதிபதியினால் நியமனம்

Super User   / 2010 மே 17 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தகால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவில் 8 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

மேற்படி நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்றிருந்த நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்நிலையில், தனி நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ மேற்படி ஆணைக்குழுவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முறைப்பாடு செய்யலாம் எனவும் ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் மேற்படி நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டமைக்கு   அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 17 May 2010 09:48 PM

    நடந்த விடயங்களை பேசுவதனால் என்ன நடந்துவிடும்? 83இல் நடந்த கலவரத்தை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவினால் என்ன பயன்? போன உயிர்கள்தான் வராது பொருள் நஷ்டத்துக்கு சமமான பணம் கொடுக்கப்பட்டதா அதையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடைந்தனரா? அதில் பொருள் நஷ்டம் அடைந்தவர்களும் இறந்து போய்விட்ட பின்னரே அறிக்கை வந்தது, இதுவும் அப்படித்தான் அதைவிட இராணுவத்துக்கு பொலீஸ் அதிகாரம் என்பதும் வன்னியை (dormant) மிகைக்க வேண்டும் தமிழ் தெரிந்த சிங்களவரைக்கொண்டு என்பதும் கோட்டாபயவின் மே 18 வெற்றி அறிக்கை-சண்டேடைம்ஸ்

    Reply : 0       0

    KONESWARANSARO Tuesday, 18 May 2010 12:37 AM

    ஆணைக்குழுக்கள் உண்மையாகவே இயங்கவேண்டும். உண்மைகளைக் கண்டறிந்தது சரியான தகவுரைகளைச் செய்யவேண்டும். அரசும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் ஆணைக்குழுக்களால் பயனேதுமில்லை.

    Reply : 0       0

    arimuhamanavan Wednesday, 19 May 2010 04:27 AM

    ethanai aanaikkulukkalai kandudam.

    Reply : 0       0

    sheen Thursday, 20 May 2010 10:03 PM

    வடக்கை இராணுவத்துக்கு பொலீஸ் அதிகாரம் கொண்டும் தெற்கை நகர அதிகார சபையைக் கொண்டும் சிங்கள ஆதிக்கம் தமிழர் மீதான ஆட்சி தொடரும். அதிகார பரவல் தலைவர்களுக்கு தான் முக்கியம் என்று தமிழ் மக்களுக்கு அரசியற் தலைமை இல்லாமல் செய்யப்படும் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதி எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு இந்தியாவுக்கே பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் அளவுக்கு நம்மவரது தந்திரம் வெல்லும் என்று நினைக்கின்றனர். இந்தியாவின் இரகசியம் இந்தியருக்கே தெரியாது. சாணக்கியன் இந்தியாவில்தான் பிறந்தான் பஞ்சதந்திரக்கதை தெரியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .