2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லூர் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இன்று இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். 

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர். 
 
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில், சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .