2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பூஜித், ஹேமசிறியின் பிணை மனுக்கள் விசாரணைக்கு

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டா மற்றும்  கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பிணை மனுக்கள்  டிசெம்பர் 17ஆம் திகதி விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டாவின் மனு  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பிணை கோரிக்கை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .