2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக புத்தளத்தில் 37 வாக்களிப்பு நிலையங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் வாக்களிப்பதற்காக 37 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்காக புத்தளம் தொகுதியில் 35 வாக்களிப்பு நிலையங்களும், ஆனமடுத் தொகுதியில் 2 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 4,547 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 22,035 வாக்காளர்களும் புத்தளத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .