2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பதவியை தொடர்ந்து வகிக்க மர்வின் தீர்மானித்திருக்கவில்லை-கெஹலிய

Super User   / 2010 மே 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி ஊடகத்துறை அமைச்சருக்கான பதவியை தொடர்ந்து வகிப்பார் என்று மர்வின் சில்வா தீர்மானித்திருக்கவில்லை என புதிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவர் அந்தப் பதவியை தொடர்ந்து வகிப்பதற்கான தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினாலேயே எடுக்கப்படும் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

புதிய ஊடகத்துறை அமைச்சருக்கான பதவியை கெஹலிய ரம்புக்வெல்ல இன்று காலை பொறுப்பேற்றிருக்கும் நிலையிலேயே,  இதனைக் கூறினார்.

மர்வின் சில்வாவை பிரதி ஊடகத்துறை அமைச்சராக நியமித்தமைக்கு ஊடகத்துறை வட்டாரங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. இதனையடுத்து, மர்வின் சில்வா பெருந்தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பிரதி அமைச்சராக கடந்த 5ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டார்.

கடந்த 5ஆம் திகதி பிரதி ஊடகத்துறை அமைச்சருக்கான பதவியிலிருந்து விலகுவதாக மர்வின் சில்வா தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்திருந்த அதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்திடம் டெயிலிமிரர் இணையதளம்  தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவியது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அலுவலகம், பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியை மர்வின் சில்வா ராஜினாமாச் செய்திருப்பதை உறுதிப்படுத்தியது.

இருப்பினும் பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியை தான் ராஜினாமாச் செய்திருப்பதாக வெளியான செய்தி வதந்தி என மர்வின் சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .