2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரசார துண்டுபிரசுரங்களுடன் இளைஞன் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியொன்றின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களுடன், தேர்தல் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2 x 9 சென்றிமீற்றர் அளவிலான 348 துண்டுபிரசுரங்கள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

26 வயதுடைய குறித்த சந்தேக நபர், பலங்கொடை, வடவல, ஸ்ரீ அக்போதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிக்கு அருகில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பலாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X