2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பார்வதி அம்மையார் கனடா போவார்;இந்தியா போகமாட்டார்

Super User   / 2010 ஜூன் 02 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் இந்தியாவுக்கு போகவிரும்பவில்லை.எனினும், கனடா நாட்டுக்கு போகலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரின் உடல்நிலை குறித்து தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

தற்போது வல்வெட்டித்துறை பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரியில் பார்வதி அம்மையார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம்  மேலும் குரிப்பிட்டார்.அவரை நேரடியாகச்சென்று பார்வையிட்டீர்களா என்று தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

தாம் கடந்த மே மாதம் 24ஆம் திகதியன்று நேரடியாகச்சென்று பார்வையிட்டதாக தெரிவித்த அவர் மாவட்ட வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாளிடம் பார்வதியம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .