2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலிகளுடன் தொடர்பிலிருந்த பிரி. அரசியல் கட்சி குறித்து விசாரணை

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனிலுள்ள அரசியல்  கட்சியொன்று விடுதலைப் புலிகளுடன்  தொடர்பு வைத்திருந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

தேர்தல்கள் ஆணையகத்தின் பதிவிலிருந்து விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சி  விலக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனிலுள்ள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் நடராஜ் பாலசுப்பிரமணியம், இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தனி நாடொன்றை ஏற்படுத்துவதில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார். ஆனால், ஒரு போதும் தான் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை  எனவும் நடராஜ் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .