2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல்; ஐ.தே.கவின் ஒழுக்காற்று குழு விசாரணை

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு  அந்தக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடமிருந்து வாக்குமூலமொன்றை  ஒழுக்காற்றுக் குழு பெற்றுக்கொள்ளவிருக்கிறது.

இவ்வாரம்  ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகி  வாக்குமூலமொன்றை வழங்குமாறும் பாலித ரங்கே பண்டாரவிடம் கேட்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில்   சாந்த அபயசேகரவே ஈடுப்பட்டிருப்பதாக  பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாந்த அபயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவையும் பாலித ரங்கே பண்டார  கண்டித்திருந்தார்.

சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X