2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலி முக்கியஸ்தர் ஒருவரின் கொள்ளை கூட்டத்தை சேர்ந்த 6 சிங்களவர்கள் கைது

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மேற்படி புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்று, இரு மகசின்கள் மற்றும் 60 துப்பாக்கி ரவைகள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன்ன.

மேற்படி ரீ - 56 ரக துப்பாக்கியானது கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனது என அடயாளம் காணப்பட்டுள்ளது என்று இராஜாங்கனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  

You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Wednesday, 02 June 2010 06:01 PM

    ஆஹா...அன்பும் சமரசமும் இங்கல்லவா உலவுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .