2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை.

இந்த பாதயாத்திரையின் நோக்கம்  மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வி​யெழுப்பியுள்ளார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர்.

ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.

“ஜனாதிபதி, பிரதமர் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும்போது, ஆட்சியிழந்த குடும்பமொன்று மீண்டும் பலத்துக்கு வருவதற்கு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X