2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பதற்றம்; இளைஞர்கள் பலர் கைது

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்ஜவ்பர்கான்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால், இன்று(13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொரோனா நோயாளர்களை  வைத்தியசாலையில் அனுமதிக்க கூடாதெனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையே, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு  நோயாளிகளைக் கொண்டுவரும்அம்புலன்ஸ் வண்டிகளை வைத்தியசாலைக்குள் நுழையவிடாது  இவர்கள் தடுத்து நிறுத்தியதாக,  வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார், இராணுவத்தினர்  பெருமளவில் குவிக்கபட்டுள்ளதால், அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X