2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை-கூட்டமைப்பு

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 39,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், 13,777 வீடுகள் முழுவளவிலும் 9,317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஆனால், இதுவரையில் 1377 வீடுகள் மாத்திரமே கட்டிக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நிவாரணக் கொடுப்பனவான 25,000 ரூபா ஆறாயிரம் பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X