2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையில் நெல் கொள்வனவு - அரசு

Menaka Mookandi   / 2010 ஜூலை 09 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெற்களை விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட நியாய விலையில் கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மட்டு. மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்களின் விலை வீழ்ச்சியடைந்திருந்தமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்களை விற்பனை செய்யமுடியாமல் பாரிய நட்டத்தை எதிர் நோக்கினார்கள். இதனால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலைமை தோன்றியது.

இதனை தடுக்கும் வகையிலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் நெற்களை பல் நோக்கு கூட்டுறவுச் சங்கங்களூடாக கொள்வனவுசெய்ய திறைசேரியுடன் கதைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதன் அடிப்படையில் கிரான், பட்டிப்பளை, பழுகாமம், வவுணதீவு ஆகிய கூட்டுறவு சங்கங்களூடாக சம்பா நெல் 30 ரூபாவுக்கும் ஏனைய நெற்களை 28 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .