2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மணித்தியாலமொன்றில் 200 வாக்குகளை மாத்திரமே அளிக்க முடியும் என, தேர்தல்கள் கண்காணிப்பு சங்கம் தெரிவித்துள்ளன.

வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரத்தை கணிப்பிட்டு இது தொடர்பான  தகவலை தேர்த்ல்கள் கண்காணிப்பு சங்கம் வெளியிட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) முடிந்தளவு நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பதே மிகவும் சிறந்தது என, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இம்முறை காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .