2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோதலில் காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை, ஓஹிய ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (16) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த மூவர், பொரலந்தை கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .