2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்த அனுமதி

Super User   / 2010 மே 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு தடை விதிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் மேற்படி அனுமதியினை வழங்கியது.

சேவையில் ஈடுபட்டிருந்தபோது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சட்டுக்களை விசாரணை செய்வதற்காக முதலாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .