2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மின்கட்டணம் செலுத்த விசேட சலுகை

George   / 2017 மே 29 , பி.ப. 05:41 - 1     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் செலுத்தப்படாத மின்கட்டணத்தை செலுத்துவதற்கு 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்படும் என, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வீடுகளில் சேதமடைந்த மின்மானியை இலவசமாக பெற்றுத்தரவும், மின்சுற்றை இலவசமாக சோதனை செய்வதற்கு மின்சாரசபை ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,  மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து  0113030303 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • vijay Monday, 29 May 2017 12:32 PM

    நல்ல திட்டம்.. வாழ்த்துக்கள் அமைச்சரே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .