2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மனித உரிமை மீறல் விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டாம்- ஜி.எல்.பீரிஸ்

Super User   / 2010 மே 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை மீறல் விடயங்களில் மாத்திரமன்றி, வர்த்தகம் மற்றும் ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு அமெரிக்காவிடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வொஷிங்டனுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய இலங்கை வெளிவிவகார அமைச்சர், இலங்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், மனித உரிமை மீறல் தொடர்பில் தாம் கவனம் செலுத்தவில்லை என்பதுடன், இது குறித்த அமெரிக்காவின் கருத்துக்கள் தம்மை கோபமடையச் செய்யவில்லை எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். இந்நிலையில், மனித உரிமை தொடர்பில் தாம் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

ஆனாலும், மனித உரிமை மீறல்களை மாத்திரம் கொண்டதாக அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் அமையக்கூடாது எனவும்  இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • KONESWARANSARO Thursday, 27 May 2010 03:09 PM

    பீரிஸ் ஐயா , கதை நல்லாயிருக்கு ஆனால் நீளம் போதாது.நீங்கள் பேராசிரியர்தானா...சந்தேகமாயிருக்கு...

    Reply : 0       0

    xlntgson Thursday, 27 May 2010 09:31 PM

    அரச கட்சியினர் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தைகளில் மிகுந்த தர்மசங்கடத்துக்குள்ளாகின்றனர்; கூட்டமைப்பினர் அரசோடு பேசும்போது அவ்வாறே சங்கடத்துக்கு ஆளாகின்றனர், அவர்கள் கருணாவுடன் கையை சிவக்க வைத்துக்கொண்டனர் இவர்கள் பிரபாவோடு, பழையகதைகளை தோண்டாமல் இருதரப்பும் செயல்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நல்லஉதவிகள் யுத்தத்தில் குண்டும் குழியான நாட்டுக்கு கிடைக்காமல் இருக்காது சொன்னதை செய்யும் இராஜ தந்திரமே பலிக்கும் ஏமாற்றும் இராஜதந்திரம் செய்ய நமக்கு அணு ஆயுதபலம் இருக்க வேண்டும் நாம் என்ன வல்லரசா? அணி சேர!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .