2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாமியாரது இறுதி கிரியைகளில் இன்று கலந்துகொள்ள பொன்சேகாவுக்கு அனுமதி

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, தனது மாமியாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ஜெனரல் சரத் பொன்சேகா அவரது மாமியாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வார் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் பாரியாரான அனோம பொன்சேகாவின் தாயார் இன்று காலை காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று மாலை பொரளையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .