2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹர பள்ளிவாசலை ஒப்படைக்க உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆப் பள்­ளி­வாசலை, மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா,   சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பள்ளிவாசல் விவ­கா­ரம்  தொடர்பில், முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­ர்  பைஸர் முஸ்­த­பா  தலை­மையிலான குழுவினர், கடந்த வாரம்  நீதி அமைச்சில்,  நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில்,  மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உள்ளிட்ட  மூன்று பள்­ளி­வாசல்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது,  குறித்த  குழுவினர்,  நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக பழமைவாய்ந்த குறித்த பள்­ளி­வாசல்,  சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­துடன், அங்கு புத்தர் சிலையொன்றும்  வைக்கப்­பட்டு, சமய வழி­பா­டுகள் நடைபெறுவதாகவும்  அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.    அத்துடன், முஸ்­லிம்­களின் சமய வழி­பா­டு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த பள்­ளி­வா­சலை மீளவும்  சிறைச்சாலை நிர்­வா­கத்­தி­ட­மி­ருந்து,  விடு­வித்துத் தரு­மாறும் கோரிக்கை விடுத்­தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து, அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, இப்பள்ளிவாசலைப் பயன்படுதுவதை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்திருந்தது. அவசரகாலச் சட்டம்  முடிந்ததும் இப்பள்ளிவாசல் நிர்வாக சபையிடம்  ஒப்படைக்கப்படவில்லை.  காலாகாலமாக மூடி­யி­ருந்­த­தாகக் கூறி பொய்க் காரணங்களைக் காட்டி, சிறைச்­சாலை அதி­கா­ரிகள் இதனை ஓய்வு அறை­யாக மாற்­றி­யுள்­ளமை, சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து,   ஜும்ஆப் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வைப் பெற்றுத்தரு­வ­தாக,  நீதி  அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, பைஸர் முஸ்தபா குழுவினரிடம்  உறு­தி­ய­ளித்­திருந்த நிலையிலேயே, இப்பள்ளிவாசலை மீளவும் உரிய நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு,   சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­தைப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .