2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்தவும் நாமலும் ஒரே சிறையில்!

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .