2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மே 18ஆம் திகதி வவுனியா நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

Super User   / 2010 மே 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய விடுதலை முன்னணி் மற்றும் இடதுசாரி முன்னணி ஆகியன இணைந்து எதிர்வரும் 18ஆம் திகதி வவுனியா நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன் தமிழ்மிரர் இணைதளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்ததின் போது முள்ளிவாய்க்கல் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறும் முகமாகவும்,  12,000 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும்,  யுத்ததின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும்படி வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இறுதிக்கட்ட யுத்ததின்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களை விசாரிப்பதற்காக  ஆணைக்குழுவொன்றை நியமித்தல், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் உயிருடன் இருப்பின் அவர்களை  விடுதலை செய்தல், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் போன்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் கலந்துகொள்வார் என்றும்  சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார். (R.A)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .