2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ் குடாநாட்டில் கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்களுக்காக கொலைசெய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

யாழ் பத்தாவத்தை இளவாலைப் பகுதியில்  கொள்ளையிடும் பொருட்டு நேற்றுமுன்தினம் இவ்வாறானதொரு கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

44 வயதுடைய இந்துமதி குணரட்னம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறித்த பெண்மணியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .