2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ். குடாவுக்கு குடிநீர் விநியோகம்; துரிதப்படுத்த நாளை கலந்துரையாடல்

Super User   / 2010 மே 28 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் யாழ். குடா நாட்டுக்கான குடிநீர் விநியோக வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று நாளை காலை 9 மணிக்கு யாழ். அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என்று அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார்.   

யாழ். குடா நாட்டு மக்களுக்கு தூய்மையான குடிநீரை இரணைமடுவிலிருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த வேலைத்திட்டத்தை அமுலாக்குவது தொடர்பாகவே  இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது என்று அரசாங்க அதிபர் மேலும் கூறினார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X