2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி மாணவன் கொலை;ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு பிடியாணை உத்தரவு

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் மகன் கடத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவை யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கைதுசெய்வதற்காக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி வழங்க வேண்டாம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த மாணவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த  14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்ததார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்து குறித்த மாணவன்  கடந்த 27ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .