2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்.மஜிஸ்திரேட் நீதிபதிக்கு ஈபீடீபீ உறுப்பினர்களால் அச்சுறுத்தல்

Super User   / 2010 மே 02 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களால் யாழ். மஜிஸ்திரேட் நீதிபதி பிரபாகரனுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது மக்கள் தமக்கு இத்தகவல்களை வழங்கியுள்ளதாக நீதிபதி கூறியுள்ளதாகவும் இத்தமிழ் இணையதளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஈபீடீபீ உறுப்பினர்கள் இருவர் ஆயுதங்களுடன் நடமாடியதாகவும், நீதிபதியின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்ததாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலீஸாரை நீதிபதி பணித்துள்ளார்.

அத்தோடு,ஈபீடீபீ செயலாளர் நாயகம், யாழ்.அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோருக்கும் இது குறித்து அறிவிக்குமாறு  நீதிபதி பிரபாகரன் பணித்துள்ளார் என்றும் இணையதளத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 02 May 2010 07:57 PM

    துணைப்படைகள், கங்காரு நீதி மன்றங்கள் ஏற்படுத்த புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார்களோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .