2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்.வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு சாத்தியம்?

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் வடக்கு பகுதியில், மேலும் ஒரு தொகுதி காணிகள் மக்கள் மீள்குடியமர்வுக்காக, இம்மாத இறுதிப் பகுதியில் இராணவத்தினரால் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வறுத்தலைவிளான் ஜே.241 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில், ஒரு பிரிவு மட்டும் விடுவிக்கப்படாமல் இராணுவ முகாம் காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த இராணுவ முகாம் அகற்றப்படும் நடவடிக்கைகள் தற்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மக்களின் பாவனைக்காக குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .