2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். வட்டுக்கோட்டையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை  கோட்டைக்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திருத்த வேலை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், குறித்த வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் அங்கு திருத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே அதில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரத்தைச் சேர்ந்த மு.கணேசமூர்த்தி (வயது 51) வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பி.தனபாலசிங்கம் (வயது 51) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .