2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரஞ்சனை கைதுசெய்ய பிடியாணை; சட்டமா அதிபர் ஆலோசனை

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் இதற்கான ஆலோசனையை இன்று (14) வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 111 பிரிவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தேற்கொண்ட சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை இன்று (14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X