2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரணிலின் கட்டளையை மீறி; சஜித்தின் கூட்டம் கொழும்பில் ஆரம்பம்

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்க கோரி அழுத்தம் கொடுப்பதற்கான கூட்டம் கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் சில நேரத்துக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வில் ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதுடன், ஐ.தே.க வின் கீழ் மட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். 

எவ்வாறாயினும், இக்கூட்டத்தை நடத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுருத்தி இருந்ததாக, அண்​மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X