2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரணில் தலைமையிலான ஐ.தே.கவுடன் இணையப்போவதில்லை - மனோ கணேசன்

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்ஹ இருக்கும்வரை தாம் அக்கட்சியுடன் இணையப்போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரானவன் அல்ல என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்ஹவுடன் நால்வர் கொண்ட ஒரு கோஷ்டி கானப்படுகின்றது. அந்தக்கோஷ்டியை நாம் விரைவில் அடையாளம் காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X