2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரவிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பொய் சாட்சியமளித்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு எதிராக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் இன்று (14​) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், ரவி கருணாநாயக்க எம்.பிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, நீதிமன்றம் இன்று அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .