2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லசந்த படுகொலை விவகாரம்: கைதான சார்ஜன்டை தடுத்து வைக்க அனுமதி

Gavitha   / 2016 ஜூலை 16 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலைச் செய்யப்பட்ட போது, அவருடைய வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதியை, கடத்திச்சென்று பலவந்தமாக தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ சார்ஜன்டை, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, கல்கிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், புலனாய்வு பிரிவின் இராணுவ சார்ஜன்ட் ஒருவரை இன்று சனிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .