2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லண்டன் உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு

Super User   / 2010 பெப்ரவரி 27 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது என சர்வதேச இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கிழக்கு,மத்திய,மற்றும் தெற்காசிய பிராந்திய வெளிவிவகாரங்களுக்கான உப குழுவின் தலைவர் செனட்டர் பொன் கஸே வெளியிட்டுள்ள அறிக்கையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்துடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் மக்கள் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் அவ்வறிக்கையில் செனட்டர் பொன் கஸே பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X