2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள்

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொதியில் 50 வீதமான வாக்குப் பதிவுகளும், கும்புறுப்பிட்டி தேர்தல் தொதியில் 46 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி, இரு தேர்தல் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றதாகவும் கூறினார்.

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளில் இன்று முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை, வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பில் ஈடுப்பட்டதாகவும்  ரோஹன ஹெட்டியாராய்ச்சி குறிப்பிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .