2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விசேட உரையாற்ற ரஞ்சனுக்கு சந்தர்ப்பம் மறுப்பு

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க முடியாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றில் விவாதமொன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவின் நேரத்தை பெற்று தேவையான உரையை ஆற்ற முடியும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் விவகாரம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .