2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முரசு மோட்டை ஏ35 வீதியில், நேற்று (04) பிற்பகல் 12.50 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுமே, இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இரண்டு பேர் தர்மபுரம் வைத்தயசாலையிலும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X