2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்துக்கு வருவோர்க்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும்.

அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும்  வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும்.

இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி நாளை காலை திறக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .