2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெலிவேரியா பகுதியில் 3 பூனை குட்டிகளை நாயொன்று பிரசவித்தது

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரியா பகுதியில் நாயொன்று 3 பூனைக் குட்டிகளை பிரசவித்திருப்பதாக குறித்த நாயின் உரிமையாளரான ஜி.கே.சோமதாஸா  தெரிவித்துள்ளார்.

குறித்த நாய் 3 பூனைக் குட்டிகளை பிரசவித்திருந்த போதிலும், இரண்டு நாள்களின் பின்னர் அதிலொரு  பூனைக் குட்டி உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், இந்த அதிசய சம்பவத்தை பார்வையிடுவதற்காக பெருமளவிலான மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

எனினும், இந்த அதிசய சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள், இது சாத்தியமற்றது  எனவும் குறிப்பிட்டனர்.

குறித்த பூனைக் குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறித்த நாயின் உரிமையாளரான ஜி.கே.சோமதாஸா  கூறினார்.





You May Also Like

  Comments - 0

  • Raj Tuesday, 29 June 2010 07:54 PM

    இது ஒரு வரவேற்கத் தக்க நிகழ்வு.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 29 June 2010 09:35 PM

    விஞ்ஞான ரீதியாக சாத்தியம் இல்லையென்றால் வேறு பூனை ஈன்ற குட்டிகளை வைத்து கதை பண்ணுகின்றார்களோ? தனதுகுட்டிகள் இறந்த நிலையில் பால்நிரம்பிய வேதனையில் பூனைக்குட்டிகளாக இருந்தாலும் நாய் பால் கொடுக்கும். அது சரி, இந்த பூனைக்குட்டிகள் வளர்ந்து பெரியவை ஆனால் பூனைக்குட்டி போடுமா? நாய்க்குட்டிகளா? கலிகாலம், கலிகாலம்! கர்மம் , கர்மம்! எனது வீட்டு பூனை எலி பிடிக்க மாட்டேன் என்று அணில்களை பிடித்து தின்கிறது, இரவில் தூங்கி, பகலில் திரிகிறது! இது ஒரு விந்தையா, சாதாரண விடயமா? யாரேனும் அறிந்தால் கூறுங்கள்! நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .