2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைத்த பாரிய துரோகம்- ஜனாதிபதி

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயுதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கடந்த வருடம் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .