2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹங்குரன்கெத்தயில் லொறி பள்ளத்தில் விழுந்ததில் நால்வர் பலி;28பேர் படுகாயம்

Super User   / 2010 மே 20 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்குரன்கெத்தை, ரிகில்லகஸ்கட பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் மேலும் 28பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி லொறி ரிகில்லகஸ்கட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கருகில் வைத்து வீதியைவிட்டு விலகியதில்  பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .