2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெலி உடைந்துவிழவில்லை: தரையிறக்கப்பட்டது

Menaka Mookandi   / 2017 மே 29 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இன்றுக் காலை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கப்பட்டதே தவிர, உடைந்துவிழவில்லை என்று, விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட போது, வீடொன்றின் கூரை சேதமாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது, குறித்த ஹெலிக்குள் 11பேர் பயணித்துள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே இதனால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதென்றும், விமானப்படை தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .