2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோத மரம் கடத்தியோர் கைது: 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரில்.எல்.ஜௌபர்கான்)

மாகோவிலிருந்து சட்டவிரோதமான முறையில் மரங்களை கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட வன இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டபோது, ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாவை நீதிபதி வீ.இராமகாலன் தண்டப்பணமாக விதித்ததுடன், சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களும் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.

மாகோவிலிருந்து கடந்த புதன்கிழமை மாலை கடத்தி வரப்பரப்பட்ட இம்மரங்களை கரடியனாறு
பகுதியில்  சோதனையிட்ட வன அதிகாரிகள் கைப்பற்றினர்.  வன அதிகரிகளான ஆர்.ஜி.குணபால, எம்.ஏ.நபீஸ், எம்.ஏ.லியா உல்ஹக் கீழ் ஆகியோர் இத்திடீர் வேட்டையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .