2024 மார்ச் 28, வியாழக்கிழமை

115 முன்னாள் போராளிகள் நாளை விடுதலை

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில் 115 பேர் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உறவினர்களுடன் இணைக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள வைபமொன்றிலேயே இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் முன்பள்ளி ஆசிரியை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்படவுள்ளதாக சுதந்த ரணசிங்க கூறினார்.

இதேவேளை, ஒற்றுமை, சமாதானம், புனர்வாழ்வு நிலைய அனுபவம், எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தொனிப்பொருள்களில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கிடையிலான சித்திரப் போட்டி நாளை புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டியில் தெரிவு செய்யப்படும் ஒவியங்கள் கொழும்பு காலாபவனத்தில் இடம்பெறவுள்ள சித்திர கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X