2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கைதிகளை பார்வையிட 13, 14இல் வாய்ப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குறித்த இரு தினங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை, சிறைக்கைதிகளை பார்வையிடவும் விரும்பினால் உணவுகளை வழங்கவும் முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிசித்தார்.

இதன் பிரகாரம், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண நாட்களில் சிறைக்கைதியொருவரைப் பார்வையிட அவரின் உறவினருக்கு சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இந்த புத்தாண்டு தினங்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை சிறைக்கைதிகளைச் சந்தித்து பேச முடியும் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .